முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்

USER SCOPED TEMP DATA 58285c6cccbb8f45f69ab94ad41c01530585e9f5ff34c03e6762bc2dad7dddbf
USER SCOPED TEMP DATA 58285c6cccbb8f45f69ab94ad41c01530585e9f5ff34c03e6762bc2dad7dddbf

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

USER SCOPED TEMP DATA c4d00805073b5aa5f629837afe4973c4ae27b0e4f9564a76d531d8a71fdddcf0

லங்காசிறி ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை ஏன் எடுக்கின்றாய் என கேட்டே நான்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.