மின்சாரம் தாக்கி முதியவர் பலி

IMG 6542
IMG 6542

வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

IMG 0524ae085b7e3d012bd543f6dd1e9ea0 V

குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்டநேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார்.
இதன்போது அவரது தோட்ட காணியில் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.

IMG 374af73b09a7a5bd0d7c0fca5ccfff74 V

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். 

குறித்த முதியவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்