அம்பலாங்கொட – கந்தேகொட பகுதியில் தொடருந்து கடவையில் சிற்றூர்ந்து ஒன்று ருஹூனு குமாரி தொடருந்தால் மோதப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தொடருந்து கடவையில் சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் சாரதி சிற்றூர்ந்தை செலுத்தியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிற்றூர்ந்தின் சாரதி சிகிச்சைகளுக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.