முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருந்தார்
இதன் பின்னணியில் விசாரணைகளை முன்னெடுத்த இராணுவ வீரர்கள் மூவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சம்பவத்தினை கண்டித்து இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது ஆர்ப்பாட்டம் இடம் பெற்றநிலையில் முல்லைத்தீவு காவல்துறையினரால் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்