பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவையாளர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இன்று (29) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
10,000 ரூபா வேதன அதிகரிப்பு, 65 என்ற ஓய்வுகால வயதெல்லையை நீக்குதல், பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, கண்டி, பேருவளை, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அபிவிருத்தி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உள்ளிட்ட பலதுறைகளை சார்ந்த அலுவலர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.