நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 347 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 540, 387 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8, 552 பேர் சிகிச்சை மையங்களிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.