பேலியகொடையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Daily News 651775598527
Daily News 651775598527

பேலியகொடையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் பிரிவினரால் நேற்று (01) காலை 11.40 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 270 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (02) புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் பிரிவினரால் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.