பேலியகொடையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் பிரிவினரால் நேற்று (01) காலை 11.40 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 270 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (02) புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் பிரிவினரால் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.