பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் 2500 ஆக அதிகரிக்க வேண்டும் – வடிவேல் சுரேஸ்

1542176543 Vadivel Suresh 2 1
1542176543 Vadivel Suresh 2 1

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள வாழ்க்கை செலவின் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபா போதுமானதல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.