நாட்டின் சாதாரண பாடசாலைகளுக்குக் கிடைக்கின்ற வளங்கள் தேசிய பாடசாலைகளுக்கு கிடைப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.