குப்பைகளை கெண்டு செல்வதற்காக சீனாவில் இருந்து புதிய எஸ் 14 டபுள் ஹெட் ரயில் தொகுதிகள் கப்பலில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு கழிவகற்றல் மீள்சுழற்சி நிலையத்திற்கு, எஸ் 14 டபுள் ஹெட் ரயிலில் கொண்டுசெல்வதற்காக சீனாவில் இருந்து புதிய ரயில் தொகுதிகள் கப்பலில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது.