சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் நேற்றய தினம் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது
பாலிநகர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் தம்பிமுத்து சிவனடியான் அவர்களின் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர்,மல்லாவி பிரதேச காவற்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர், மதகுருமார், சிபிஆர் திட்ட முகாமையாளர்கள், மற்றும் மாற்று வலுவுள்ள உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் மாற்றுவலுவுடையோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் ஞாபகார்த்த பயன்தரு மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது