முல்லைத்தீவிலும் அடுத்தடுத்து சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகிறது அதனடிப்படையில் புதுக்குடியிருப்பை தொடர்ந்து புளியமுனை,செம்மலை பகுதிகளிலும் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று(03) காலை 11 மணியளவில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் நேற்றய தினம்(03) மாலை 6 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட புளியமுனை கிராமத்திலும் மற்றுமொரு சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது
இதனை தொடர்ந்து நேற்றயதினம்(03) மாலை 8 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறை பிரிவுக்குட்பட்ட செம்மலை கிராமத்திலும் மற்றுமொரு சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினமே முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவாகியதோடு தொடர்ச்சியான இந்த வெடிப்பு சம்பவங்கள் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது