பாகிஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை

mohan wijewickrama 700e12f5 a02a 44af bc73 d5d8f649194 resize 750
mohan wijewickrama 700e12f5 a02a 44af bc73 d5d8f649194 resize 750

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் அடிப்படைவாதிகளினால், சித்திரவதைக்கு உட்படுத்தி, கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை மறுதினம் அவரது சடலம் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதற்கான செலவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாகிஸ்தானில் உள்ள ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை அந்தநாட்டு வெளியுறவுச் செயலர் உறுதி செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.