நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் பலி!

boy 2
boy 2

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அள்ளுண்டு சென்று உயிரிழந்தனர்.

இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு மரணித்தனர்.

இன்று முற்பகல் உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.