படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களின் நினைவு நாள்

mana
mana

இன்றய தினம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (2) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சி இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்கரையில், காந்தி சிலைக்கு அண்மையாக இன்று மாலை 5 மணிக்கு நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2006 ஆம் ஆண்டு இம்மாதம் (2) ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கா.பொ.த உயர் தரப் பரீட்சையை எழுதிவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த நிலையிலையே மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.