பலர் தற்கொலை செய்த வீட்டில் பயமில்லாமல் வாழும் மருத்துவர் !

625.0.560.350.160.300.053.800.668.160.90 3
625.0.560.350.160.300.053.800.668.160.90 3

இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் நபர் ஒருவர் குடியேறியுள்ளளார்.

புதுடெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 2018ல் இறந்து கிடந்தனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பெண்மணி தரையிலும் சடலமாக கிடந்தனர்.

விசாரணையில் சொர்க்கத்தை அடைய போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோகன் சிங் கஷ்யப் என்ற மருத்துவர் தனது மருத்துவ ஆய்வகத்தை அந்த வீட்டில் தொடங்கியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது

என் குடும்பத்தினர் மற்றும் 7 ஆய்வக ஊழியர்களுடன் இங்கு நாங்கள் உள்ளோம்.

கடந்த மூன்று நாட்களில் இங்கு எந்தவொரு அசாதாரணமான விடயங்களையும் நான் உணரவில்லை.

நாங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் வேலை செய்து வருகிறோம், என கூறியுள்ளார்.