பங்குகளை வாங்க எவரும் முன்வராத பட்சத்தில் எயார் இந்தியா நிறுவனம் இன்னும் 6 மாதத்தில் மூடப்பட வாய்ப்புள்ளதாக எயர் இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள சூழலில் 6 மாதங்கள் வரை மட்டுமே எயார் இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியும். பங்குகள் விற்பனை நடந்தால் மட்டுமே மேற்கொண்டு எயார் இந்தியா தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு சொந்தமான எயர் இந்தியா விமான நிறுவனம் தற்போது நஸ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எயார் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.