சமூகவலைத்தள பயனாளிகளிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள உருக்கமான கோரிக்கை

61aa2
61aa2

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள பயனாளிகளிடம் கோரியுள்ளார்.

மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைதளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.