இலங்கையரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 சந்தேகநபர்களும் குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி மீள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். இதேவேளை, பிரியந்த குமாரவின் உடலை தாங்கிய விமானம் லாஹூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
யு.எல் 186 ரக விமானத்திலே அந்த சடலம் கொண்டு வரப்படுவதுடன், குறித்த விமானம் இன்று மாலை 5 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.