ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கியதில் இருவர் மாயம் – ஒருவர் பலி!

e
e

பேராதனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், அவர்களில்  ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காணாமல்போயுள்ளனர். 

இத்துயர சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. 

கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு ஐவர் சென்றுள்ளனர். இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ஐவரும் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் இருந்தவர்களால் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். எனினும், ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

19 வயது தாயும், அவரின் மகளுமே காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.