பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் தாங்கிய விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
பிரியந்தவின் உடலை தாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு புறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த விமானம், இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.