கிளிநொச்சியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு!

1 331 1
1 331 1

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்து பெருந்தொகையான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல் வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்தனர்

படுகாயமடைந்த அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சம்பவம் இடம்பெற்ற  வீட்டில் ஒரு சில வெடி  பொருட்கள் அன்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து  விசேட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளாகத்திலிருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.