எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரவை மையப்படுத்தி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதம் தொடர்ச்சியாக மீறப்படுவதானது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.