கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்

IMG 20211209 WA0030
IMG 20211209 WA0030

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு இன்று கரைதுறைப்பற்று   பிரதேச சபையின் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்  தலைமையில் இடம்பெற்றது

சபையில் இருபத்தி நான்கு உறுப்பினர்கள் இருக்கின்ற போது நான்கு உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்காத நிலையில் 20 உறுப்பினர்கள்  சமூகமளித்தனர்

இந்நிலையில் சமூகமளித்த 20 உறுப்பினர்களின்  பூரண சம்மதத்தோடு 2022 ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது

குறித்த பாதீட்டின் ஊடாக  சபையிலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் தலா 2.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது