ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இன்று முற்பகல் கெரவலப்பிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது அந்த குழுவின் பிரதிநிதிகள் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் கலமநாத் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
அண்மைய நாட்களாக பதிவான சமையல் எரிவாயுடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.