முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

static image cdn
static image cdn

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு இன்று அதன் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

சபையில் 24 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் இன்றைய தினம் 4 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 20 உறுப்பினர்களின் பூரண அனுமதியுடன் அடுத்த ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பாதீட்டின் ஊடாக சபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களுக்கும் தலா 2.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.