2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, கடந்த 22 ஆம் திகதி, 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாதீட்டுக்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதம், இன்று வரை நடைபெற்று, மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.