சமூக கோரிக்கைகளை முன்வைத்து பாதீட்டுக்கு ஆதரவளித்திருக்க வேண்டும் – சாணக்கியன்

Himasha 2
Himasha 2

பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை கோரி பாதீட்டுக்கு ஆதரவாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், சிலர் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பாதீட்டுக்கு ஆதரவளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து குறுக்கிட்ட சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்தனர்.

நாடாளுமன்றில் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.