ஒரு மில்லியன் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

kaithu
kaithu

வவுனியா புளியங்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உட்பட இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 6 கிலோ 5 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

வவுனியா பிரிவுக்குட்பட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை சார்ஜன்ட் ஒருவரும், மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 மற்றும் 53 வயதுடைய சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.