ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சாரதி!

IMG aaed877f8b127af7628f58fa096a67a5 V
IMG aaed877f8b127af7628f58fa096a67a5 V

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

குறித்த விபத்து இன்று (12) காலை 10 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரத கடவையால் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று தண்டவாள பகுதியில் சென்றபோது இயந்திர கோளாற்றினால் நின்றுள்ளது.

இதன்போது கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் குறித்த முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியது.

இந் நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதி விரைந்து செயற்பட்டு கீழே பாய்ந்தமையால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.