நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர கோரிக்கை

9 1 1
9 1 1

நிபந்தனை அடிப்படையிலேனும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தற்போது உதவிகள் வழங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிபந்தனையை முன்வைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் சந்திப்புக்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.