தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற 2020க்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முதன் முறையாக இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டி 2020க்கான தொலைநிலை மதிப்பீட்டுத் தேர்வில் களவிஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணைப் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பெற்ற நிலையில், கடந்த 25.11.2021ம் திகதியன்று நேரடியான களவிஜயம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திலிருந்து வருகைதந்த மதிப்பீட்டுக் குழுவினர் மாவட்ட செயலகத்திலுள்ள ஒவ்வொரு கிளைகளையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 11-12-2021 அதிகாலை வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
அதேவேளை கடந்தமுறை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியில் அரச பிரிவில் விண்ணப்பித்து மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.