களுத்துறை மேல் நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று (13) தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி புலத்சிங்கள – பொலேகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரை படுகொலை செய்த வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் கே.கஹடகமகே இன்று தீர்ப்பளித்தார்.
அத்துடன், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி புலத்சிங்களவில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.