எதிர்வரும் புதன்கிழமை(15) மாற்று வலுவுடையவர்களுக்கான தொழிற்சந்தை!

FB IMG 1639413630742
FB IMG 1639413630742

முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினரால் மாற்றுவலுவுடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தனியார் நிறுவனங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான தொழிற்சந்தை எதிர்வரும் 15.12.2021ம் திகதி  புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த தொழிற்சந்தையில் பங்குபற்றவிரும்புபவர்கள் மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவின் இணைப்பாளர் ஜெ.துஷிராஜ் அவர்களை 077 3482423 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். எனவே குறித்த தொழிற்சந்தையில் பங்குபற்றி பயனடையுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலக  மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.