எகொடமுல்ல கடலுக்குச் சென்று காணாமல்போன 3 மீனவர்களும் கரைக்கு திரும்பினர்

ff5c7799 3fc87969 c00ec29a fishering 850x460 acf cropped 850x460 acf cropped
ff5c7799 3fc87969 c00ec29a fishering 850x460 acf cropped 850x460 acf cropped

அஹூன்கல்ல – எகொடமுல்ல பகுதியில் கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போன 3 மீனவர்களும் இன்று(14) காலை கரைக்கு திரும்பியுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு நேற்று முன்தினம் முதல் காணாமல் போனதாக குறித்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகின் உரிமையாளரால் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் கரைக்கு திரும்பியுள்ளனர்.

கடல் வழியை கண்டறிவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.