பதுளை – கொழும்பு வீதியில் ஹாலிஎல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட நபரொருவர் சிற்றூர்ந்தொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (13) மாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அந்நபருக்கு 200 ரூபாவை கொடுத்துவிட்டு சிற்றூர்ந்து சாரதி தப்பிச் சென்றுள்ளதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஹாலிஎல காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தப்பிச் சென்ற சாரதி கரந்தகொல்ல வீதித் தடுப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.