குருஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்து: சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை!

vilakam
vilakam

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 3 பேர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உட்பட 3 பேரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.