கைகலப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நெல்லியடி ராஜாராமன் பகுதியில் இன்று (2) ஆம் திகதி இடம் பெற்ற போது இளைஞர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைகலப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதை பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.