தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த 12 பேரும் இன்று (20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குறித்த மீனவர்கள் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதானவர்கள் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.