சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பு நாளை!

face 5 1
face 5 1

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பு நாளை (21) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் கட்ட சந்திப்பு கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நாளைய தினம் மூன்றாம் கட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.