சன்ஷைன் சுத்தா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!

1624437725 Arrest 2 1
1624437725 Arrest 2 1

சன்ஷைன் சுத்தா என அழைக்கப்படும் அமில பிரசங்க ஹெட்டிஹேவாவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு உதவிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – வெலம்பட பிரதேசத்தில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (20) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 4 கைப்பேசிகள் மற்றும் 2 போலி அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் சன்ஷைன் சுத்தா கொலையுடன் தொடர்புடைய நபர்களை கேகாலை பகுதிக்கு அழைத்துச் சென்று இரகசியமாக தடுத்து வைத்து, அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.