முன்னாள் சி.ஐ.டி. பிரதானி ரவி செனவிரத்னவிடம் வாக்குமூலம் பதிவு!

1563955359 ravi 2
1563955359 ravi 2

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்னவிடம் சி.ஐ.டி. இன்று விசாரணைகளை நடத்தி வாக்கு மூலம் ஒன்றினை பதிவுசெய்துள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணைத் தொடரின் ஒரு அங்கமாக அவரிடம் இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு என இதற்கு முன்னர் ரவி செனவிரத்னவை சி.ஐ.டி. வாக்கு மூலம் பதிவு செய்ய அழைத்திருந்த நிலையில், பின்னர் அதனை இரத்து செய்திருந்தது. 

அதனையடுத்தே மீளவும் இன்று சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட அவரிடம், சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடாக வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.