2019 பட்டமளிப்பு விழா தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை!

screenshot2327 1639934581
screenshot2327 1639934581

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடர்பில் மதிப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், முக்கியமான சந்தர்ப்பத்திற்குத் தேவையான கண்ணியத்தையும் மரியாதையையும் பேண உதவிய இளம் பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்துகின்ற அதேவேளை நற்பிரஜைகளை உலகத்துக்கு அளிக்கும்போது, பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் நன்மதிப்பையும் எவராவது தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.