பண்டிகை காலத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு!

Sarath Weerasekera 1
Sarath Weerasekera 1

கொழும்பு மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரட்னவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறும் காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு மற்றும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் மொபைல் மற்றும் வாகன ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.