மனைவியைக் கொலை செய்து 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு தலவாக்கலை – வட்டகொட பிரதேசத்தில் தனது மனைவியை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், எம்பிலிப்பிட்டிய – துன்கம பிரதேசத்தில் வைத்து 74 வயதான சந்தேகநபர் நேற்று (22) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.