போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

kaithu

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போரத்தோட்டை பகுதியில் போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, பணம் பெறும் வியாபாரத்தை முன்னெடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடியினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட 17 பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள், கணினி மற்றும் 5 கையடக்க தொலைபேசிகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக இவ்வாறு போலி பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 21 முதல் 37 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.