திஸ்ஸமஹாராம – பெரலிஹெல வீதியில் அவதானமற்ற வகையில் பயணித்த கெப் ரக வாகனம் மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த கெப் ரக வாகனம் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளி என்பவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளியுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த உந்துருளியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த பெண் ஆகியோர் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உந்துருளியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கெப் ரா வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.