நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளைகள் அதிகரிக்கும் நிலை உருவாகும் – சாணக்கியன்

download 46
download 46

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு இதன் காரணமாகக் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.