பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுயமாக பதவி விலகுவதற்கு அரசுக்குள் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நிலையினை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.