அபிவிருத்திக்கான சவுதி நிதியம் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதி

21 60de79d26adc1 5
21 60de79d26adc1 5

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சவுதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாத் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும், இரு அரசாங்கங்களுக்கிடையில் தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக்காகவும் சவுதி அபிவிருத்திக்கான நிதியத்திற்கும் சவுதி அரேபியா இராச்சியத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இந்நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது.